2050ஆண்டளவில் கார்பன் நிகர அளவினை பூச்சியத்தை எட்டும் இலகிற்கான பயணம் ஆரம்பம்.
கார்பன் நிகர அளவு 2050 ஆண்டளவில் பூச்சியத்தை எட்டும் இலகிற்கான அரசாங்க வேலைத்திட்டத்திற்கு அமைய, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மேலும் இவ் வேலைத்திட்டமானது தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
நாட்டின் வலுசக்தி வரலாற்றில் முதல் முறையாக, தலா 05 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட மிகப்பெரிய 04 காற்று விசையாழிகள் (Turbines) மன்னார் விண்ட்ஸ்கேப் காற்றாலை மின் திட்டத்தின் கீழ், நிறுவப்பட்டுள்ளது. மேலும் இவ் வேலைத் திட்டம் உள்நாட்டு நிறுவனம் ஒன்றினால் செயல்படுத்தப்படுவதால், வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுக்குச் செல்லும் பாரிய வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளதோடு, இது உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த பங்களிப்பு செய்கிறது. மேலும்,ஜனாதிபதி நினைவுப் பலகையைத் திறந்து வைத்ததுடன்,மின்நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டு , விசையாழிகளை இயக்கி வைக்கவும் செய்தார். வலு சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஷெர்லி குமார, இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார ஆகியோருடன், CEYLEX Renewables நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் சமீர கணேகொட மற்றும் அதன் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.