ஓட்டமாவடி சிராஜ் எக்ஸலன்ட் கொலேஜ் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா.
ஓட்டமாவடி சிராஜ் எக்ஸலன்ட் கொலேஜில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான
பரிசளிப்பு விழாவும் பெற்றோர் ஒன்றுகூடலும்
நேற்று (24.01.2026) சனிக்கிழமை மாலை கல்லூரி அதிபர் ஏ.எல்.ஏ.ரஹீஸ் (நளீமி) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திம்புலாகல பிரதேச செயலாளர் திருமதி எம்.எம். ஹைருன்னிஸா பைறூஸ் கலந்து கொண்டு
“பிள்ளைகளின் எதிர்கால வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கௌரவ அதிதிகளாக
கல்லூரியின் பணிப்பாளர் சபை தலைவர் மௌலவி எம்.எஸ்.எம். அஸ்ரப் (மன்பஈ),
பணிப்பாளரும் சமுக சேவை உத்தியோகத்தருமான மௌலவி ஏ.நஜீம் (சிறாஜி),
சட்டத்தரணி எஸ்.எம். சனூஸ் (நளீமி),
சட்டத்தரணி M. எம்.அனீஸ்,
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் மௌலவி. எஸ்.கடாபி (சிராஜி)
கல்குடா சமூக நல அமைப்பின் தலைவர் ஏ.முஹம்மத் அருஸ்,
கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொருளாளர் மௌலவி ஏ. இல்யாஸ் (கபூரி)
ஆபியாஸ் ஆடையக உரிமையாளர் தொழிலதிபர் உவைஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித், கலாச்சார உத்தியோகத்தர் எம்.எச்.எம்.நியாஸ் நளீமி, சிராஜ் எக்ஸலன்ட் கொலேஜ் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.