கரைவலை மீனவர் பிரச்சினை ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை நேரடியாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். 2010ஆம் ஆண்டு தொடங்கி, குறிப்பாக 2013ஆம் ஆண்டிலிருந்து உழவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட வின்ச் (Winch) இயந்திரத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலின் தற்போதைய நிலைமை குறித்து மீனவர் பிரதிநிதிகள் விரிவாக விளக்கமளித்தனர். தொழிலாளர் சிக்கல்கள் மற்றும் நடைமுறைக் கடினங்கள் தொடர்பாகவும் அவர்கள் கவனம் செலுத்தினர்.

மீனவர் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை விளக்கிக் கூறியதுடன், தங்களுக்கு சந்திப்பு வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கவனமாக கேட்ட ஜனாதிபதி, இந்த பிரச்சினைக்கான தீர்வு பொருளாதார ரீதியில் எந்தவொரு தரப்பினரின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்தினார். அரசாங்கத்தின் நோக்கம் ஒவ்வொரு குடிமகனின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், பொது மீனவ சமூகம் முன்வைத்துள்ள குறைகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளில் ஈடுபடும் அரச நிறுவனங்களின் அறிக்கைகள், அதேபோல் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பரிந்துரைகள் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு இணக்கம், எதிர்கால சந்ததியினருக்கான கடல் வளங்களின் நிலைத்தன்மை மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தவிர்ப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலின் முடிவில், அனைத்து தரப்பினரும் இணைந்து குறுகிய காலத்திற்குள் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தி நடைமுறைசார்ந்த தீர்வுகளை முன்வைக்க ஒப்புக்கொண்டனர். அதன்படி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த திங்கட்கிழமை முதல் அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் மேலதிக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கலந்துரையாடல்கள் நடைபெறும் காலப்பகுதியில், கரைவலை முறையில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் குத்தகை மற்றும் நிதி சார்ந்த சிக்கல்கள் குறித்து நிதி அமைச்சுடன் பேசவும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தச் சந்திப்பில் ராமலிங்கம் சந்திரசேகர் , ரத்னா கமேகே உள்ளிட்ட கடற்றொழில் துறை அதிகாரிகளும், ஜனாதிபதி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளும், கரைவலை மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660