இரு வார அவகாசம் கேட்கும் ஷிரந்தி ராஜபக்ஷ
ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களை இன்று பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பு விட்டிருந்த நிலையில் அவரது தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார். மேலும் அவர் முன்னிலையாக இன்னும் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக, இன்றைய தினம் காலை 9 மணிக்கு பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவ் அழைப்பானது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் சிரிலிய எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்கின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இவரை பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வர சொல்லியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.