டிட்வா சூறாவளியால் சேதமடைந்த குடும்பங்களுக்கு ரூ. 50,000 கொடுப்பனவு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார கூறியதாவது, இதுவரை 115,757 வீடுகளுக்கு இந்த நிதி சென்றடைந்துள்ளது.மேலும், சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு வணிகங்கள் மற்றும் கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்ப மற்றும் நிலைநிறுத்த அரசாங்கம் நட்டஈடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மேலும் இதற்காக, வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு ரூ. 12.6 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி விநியோகம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றது.இந்த கொடுப்பனவுத் திட்டம், சூறாவளியால் வாழ்வாதாரத்தை இழந்த சிறு தொழில்முயற்சியாளர்களின் பொருளாதார மீட்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.