கேரளத்தில் சமூக ஊடக வீடியோ குற்றச்சாட்டால் உயிரிழந்த தனியார் ஊழியர், காரணமான பெண் கைது
கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வீடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஷிம்ஜிதா முஸ்தபா என்ற 35வயதுடைய பெண்,இவர் கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இப் பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில், பேருந்து பயணத்தின் போது ஒருவர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பரவிய விடியோவில் தன் மீதான குற்றச்சாட்டை கண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக் என்பவர் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார். மேலும் இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகத்தில் பிரபலமடைய வேண்டுமென்றே விடியோவை பதிவு செய்து போலிக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக ஷிம்ஜிதாவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. தற்கொலை செய்துகொண்ட தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து ஷிம்ஜிதா மீது கேரள பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல்துறைக்கு ஒரு வாரத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வடக்கரை பகுதியில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை கேரள காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்